அவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும், நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை கல ந்தாய்வு நடப் பதையும் நிறுத்த முடியாது என்று உத்தர விட்டனர்.
The post நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறாத 770 பேருக்கு மறுதேர்வா? எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.