இதன்படி, ஐதராபாத்தில் கடந்த மே 28ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். ஆந்திரா மாநிலம் நெல்லூர், திருப்பதி வழியாக வந்து தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு வந்தேன். அங்கிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்கிறேன். பின்னர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்கிறேன். நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதற்கு ஓராண்டு ஆகலாம். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கிக் கொள்கிறேன். ஓய்வு எடுக்கும் இடங்களில் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்வேன். இவ்வாறு எனது பயணம் தொடர்கிறது’ என்றார்.
The post சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் தெலங்கானா வாலிபர் appeared first on Dinakaran.