சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது : துரைமுருகன் விளக்கம்

சென்னை : சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக்காவலர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதையடுத்து பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது, அந்த நேரத்தில் வேறு எந்த விவாதத்தையும் எடுக்க முடியாது என்பது விதி. முக்கிய பிரச்சனைகள் குறித்த விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், அவருக்கு சட்டம் தெரியும் ,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது : துரைமுருகன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: