இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், ஷீட்டான் ராம், அசோக் குமார், சுரேஷ் மற்றும் பஜன்லால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 1 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.70,000 பணம் மற்றும் 2 ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போராராம்(42) என்பவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 238 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை மாங்காட்டில் தங்கி நகை கடையில் கொள்ளை அடிப்பதற்காக, வேவு பார்த்து உதவியதாக தெரிய வந்தது. இந்த கொள்ளையில் தேடப்பட்டு வந்த கடைசி நபரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்கப்பட்டார்.
The post நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் நகை கடையை வேவு பார்த்தவர் கைது appeared first on Dinakaran.