பிரியங்காவை எதிர்த்து தான் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையே முடிவு செய்யும் :ஆனி ராஜா

வயநாடு : வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதற்கு கேரள காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. ராகுலுக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆனி ராஜா, பிரியங்கா வேட்பாளராக அறிவித்ததை பெண் என்ற முறையில் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பிரியங்காவை எதிர்த்து தான் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையே முடிவுசெய்யும் என தெரிவித்த ஆனி ராஜா, நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலை என்றார்.

The post பிரியங்காவை எதிர்த்து தான் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையே முடிவு செய்யும் :ஆனி ராஜா appeared first on Dinakaran.

Related Stories: