இதில் கிருஷ்ணவேணி அருகில் ஒருவர் நின்றுகொண்டார். மற்றொருவர் பீரோ சாவியை வாங்கி திறந்து அதில் இருந்து 5 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இந்நிலையில் செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்ற மதுரைவீரன் சிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்த போது அவரிடம் நடந்த சம்பவத்தை கிருஷ்ணவேணி கூறியுள்ளார். வருமான வரிதுறை அதிகாரிகள் போல் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post ஐடி அதிகாரிகள் என கூறி ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம், நகை கொள்ளை appeared first on Dinakaran.