மாமல்லபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஆர்ச் அருகே கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து 2 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், வண்டலூர் அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெய் (எ) ஜெயக்குமார் (32), கண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post மாமல்லபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: