இந்நிலையில், ஜிரிபாமில் இருந்து இம்பாலுக்கு அத்தியாவசிய பொருட்களை 100 லாரிகள் நேற்று சென்றன. இந்த லாரிகளுக்கு ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.டமேங்க்லாங்க் மாவட்டத்தில் உள்ள டட்பங் என்ற இடத்தில் சென்ற லாரிகளை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு மணிப்பூரில் உள்ள பல பகுதிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன.ஆனால்,ஜிரிபாமில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஜிரிபாமில், மெய்டீ,குக்கி,நாகா,முஸ்லிம்கள் மற்றும் மணிப்பூர் அல்லாதவர்களும் வசிக்கின்றனர். இந்த சம்பவத்தால் ஜிரிபாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த 100 லாரிகள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.