மரத்தில் கார் மோதி தாய், மகள் உட்பட 3 பேர் பரிதாப பலி

போளூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்குறைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதர்(49). இவர் மனைவி கல்யாணி(33), மகன் பின்கா ராமச்சந்திரன்(11), மகள் ஸ்ரீரிதிஷா(8), உறவினர் ரவி(24), ஈஸ்வரி(62) ஆகியோருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு காரில் சென்றார். காரை சசிதர் ஓட்டிச்சென்றார்.

நேற்று காலை 6 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூர் கிராமத்தில் சென்றபோது கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இதில் கார் முன்பகுதி நொறுங்கி, கல்யாணி, ஸ்ரீரிதிஷா, ரவி ஆகியோர் உடல்நசுங்கி இறந்தனர்.

The post மரத்தில் கார் மோதி தாய், மகள் உட்பட 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: