டி20 கிரிக்கெட் சூதாட்டம் ம.பியில் ரூ.15 கோடி பறிமுதல்

உஜ்ஜைன்: மத்தியபிரதேசம் உஜ்ஜைனில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வைத்து பெரும் சூதாட்டம் நடைபெறுவதாக உஜ்ஜைன் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உஜ்ஜைனியின் முசாதிபுரா மற்றும் 19 ட்ரீம் காலனி உள்பட பல இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் சூதட்டம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.14.58 கோடி ரொக்கப் பணம், 7 வௌிநாடுகளின் கரன்சி நோட்டுகள், 40க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள், சிம் கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை தேடி வருகின்றனர்.

The post டி20 கிரிக்கெட் சூதாட்டம் ம.பியில் ரூ.15 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: