கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் வணிக வளாகத்தில் பற்றியத் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 4வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.