வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனை ஆனது. திடகாத்திரமான கிடா ஆடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8 ஆயிரம், செம்மறி ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ.3.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதேபோல, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.