இந்நிலையில், எந்த அர்த்தத்தில் எஸ்.பி.வேலுமணி பேசி இருக்கிறார் என தெரியவில்லை. அவர், விரக்தியால் பேசி வருகிறார். பாஜ தற்போது வளர்ந்து கொண்டு இருக்கிறது. பூனை யானையாக மாற கடுமையான பாதையில் செல்ல வேண்டும். அதற்குள் தொண்டர்கள் விபரீதமாக நடந்து கொள்ள வேண்டாம். ஆட்டை நடுவீதியில் கொண்டு வந்து கொடூரமாக வெட்டி சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம். அப்படி வெட்ட வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள். இது தான் என் ஊர். நான் இங்கு தான் இருப்பேன். அண்ணாமலை மேல் கை வைக்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள். ஆடு மேல் கை வைக்க வேண்டாம்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர் இருக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா?. மக்களை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பேன். வாக்குறுதிகளை நிச்சயம் நடத்தி காட்டுவோம். 10 ஆண்டு காலமாக அதிமுக ஸ்மார்ட் சிட்டி போன்றவற்றில் செய்த ஊழல்களை கையில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.ராதாகிருஷ்ணனை விட குறைவான வாக்குகள் வாங்கியுள்ளதாக எஸ்.பி.வேலுமணி கூறி இருப்பது தவறான புள்ளி விவரம். அவரின் அரசியல் ஞானத்தை அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 2026ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.
எனது செயல்பாடு தான் பாஜ இரட்டை இலக்கு, வளர்ச்சி ஆகும். அதிமுக கோட்டையில் நாங்கள் டெபாசிட் வாங்க உள்ளோம். எங்களால் தான் அதிமுக வாக்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். யாராலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. முழுமையான கூட்டணி ஆட்சியை பார்க்க போகிறோம். நான் உள்ளவரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை. பாஜ மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்து தான் கூட்டணி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post 2019ல் ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை நான் தலைவராக இருக்கும்வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடிக்கும், வேலுமணிக்கும்தான் சண்டை நடக்கிறது; அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.