புதுக்கோட்டை உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்று நடும் விழா

புதுக்கோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது . உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சண்முகம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (மேல்நிலை) முருகையன் உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் மாவட்ட உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: