இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பாஜவிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜ அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக, எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன்தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான ரத்தமும், உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாகதான் பாஜ பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் (வி.கே. பாண்டியன்) அறத்தின் வழி நின்று வென்று காட்டுவான். .
The post தமிழர்களை இழிவுபடுத்தி பாஜ வெளியிட்ட விளம்பரம்: ஜெயக்குமார் கடும் கண்டனம் appeared first on Dinakaran.