தாயகம் திரும்பிய தமிழர்களான முகாம் மாணவர்கள் நன்கு படித்து நல்ல பணியில் அமர்ந்து தங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். முகாம் வாழ் மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும் என்று பேசினார். அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்றார். இந்த பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதும் 103 முகாம்களை சேர்ந்த 2256 மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மாதிரி பள்ளிகளில் இருந்தபடியே பங்கேற்று பயனடைந்தனர்.
The post இலங்கை தமிழ் பள்ளி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் திட்டம் 2256 பேர் பங்கேற்று பயன் appeared first on Dinakaran.