வாக்கு இயந்திரத்தை சீல் பிரிப்பது, வீடியோ செய்வது, முகவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “சென்னையில் உள்ள 3 மையங்களில் மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மொத்தம் 265 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்படும்: சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் அமைக்கப்படும். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 922 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் பணிக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.