விபத்து நிகழ்ந்த போது போலீஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளனர். காரில் முறையாக ஹேண்ட் பிரேக் போடாததால் கார் சரிவில் இறங்கி விபத்துக்குள்ளானது. மேலும் அச்சமயத்தில் காரில் ஓட்டுநர் இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் மற்றொரு போலீஸ் அதிகாரியும் அமர்ந்துள்ள நிலையில் அவரும் காரை கட்டுப்படுத்த முயற்சி செய்தும் கட்டுப்பாட்டை மீறி கார் சரிவில் இறங்கியது. இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கவனக்குறைவால் இருந்ததால் இச்சம்பவம் நிகந்துள்ளதால் காவல் துறையினர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
The post மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக் போடாததால் தூய்மை பணியாளர் மீது மோதிய போலீஸ் வாகனம்: கவன குறைவாக செயல்பட்டதாக கூறி 2 காவலர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.