தினமும் மது அருந்தி விட்டு அவர் கோயிலுக்கு வருவதும், பக்தர்களுடன் தகராறு செய்வது குறித்து பலமுறை நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புலப்படுகிறது. இதையடுத்து பக்தர்களே அவருக்கு தோப்புக்கரணம் போடச்சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர். இதையடுத்து பக்தர்களிடம் இனி இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்று ராஜாராமன் மன்னிப்பு கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயிலுக்கு மது அருந்தி வந்து ரகளையில் ஈடுபட்ட ராஜாராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் குடிபோதையில் அர்ச்சகர் ரகளை: தோப்புக்கரணம் போடவைத்து பக்தர்கள் நூதனம் appeared first on Dinakaran.