மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள அலங்காரங்களில் மலர்கள் அழுகி உதிர துவங்கியது

ஊட்டி : தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களில் தொடர் மழையால் மலர்கள் அழுகி உதிர துவங்கியுள்ளன. கோடை சீசனின் போது ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, பல்வேறு மலர்களை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இம்முறை 126வது மலர் கண்காட்சி இம்மாதம் 10ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் முடிந்த நிலையில், மீண்டும் 6 நாட்கள் மலர் கண்காட்சி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியில் டிஸ்னி வேர்ல்ட், மலை ரயில், தேனீ, மலர் கொத்து, கித்தார், ஆக்டோபஸ் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். கடந்த 10 நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள டிஸ்னி வேர்ல்ட், மலை ரயில் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்களில் உள்ள மலர்கள் அழுகியுள்ளன. எனினும், இதனை கண்டு கொள்ளாமல், சுற்றுலா பயணிகள் அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

அதேசமயம், மேரிகோல்டு, பேன்சி, டெய்சி போன்ற மலர்கள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் வாடாமலும், மழையால் பாதிக்காமல் உள்ளதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இவைகளின் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள அலங்காரங்களில் மலர்கள் அழுகி உதிர துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: