மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தி இருப்பு பாதையை சீரமைக்கு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சேதமடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டதை அடுத்து மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. காலை முதல் மலை போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 180 பயணிகள் உதகை மண்டலம் புறப்பட்டு சென்றனர். நான்கு நாட்களுக்கு பிறகு மலை போக்குவரத்து தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து: நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.