மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து: நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது

கோவை: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக கல்லார் மற்றும் அட்டாலி ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் போக்குவரத்து கடந்த 18ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தி இருப்பு பாதையை சீரமைக்கு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சேதமடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டதை அடுத்து மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. காலை முதல் மலை போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 180 பயணிகள் உதகை மண்டலம் புறப்பட்டு சென்றனர். நான்கு நாட்களுக்கு பிறகு மலை போக்குவரத்து தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து: நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: