கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

 

ராமநாதபுரம், மே 18: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கன்னிகா பரமேஸ்வரி அவதரித்த தினத்தை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் எடுத்தவர்கள் சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: