மது பாட்டிலில் மிதந்த பூச்சி, கொசு

தாராபுரம், மே 11: திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-உடுமலை சாலையில் தீயணைப்பு நிலையம் எதிரே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் 150 ரூபாய் கொடுத்து டாப் ஸ்டார் என்ற நிறுவனத்தின் குவாட்டார் பாட்டில் வாங்கியுள்ளார். அந்த மதுபாட்டிலில் பூச்சி மற்றும் கொசுக்கள் இறந்து நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், கடையின் சேல்ஸ்மேன் இடம் காண்பித்து நீங்கள் கொடுத்த மதுவில் கொசு உள்ளது என தெரிவித்துள்ளார். அதற்கு சேல்ஸ்மேன் பாட்டிலை மேலும் கீழும் ஆட்டி பார்த்து அந்த மது பாட்டிலை வாங்கிக் கொண்டு வாடிக்கையாளருக்கு வேறு மது பாட்டில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

The post மது பாட்டிலில் மிதந்த பூச்சி, கொசு appeared first on Dinakaran.

Related Stories: