தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கடந்த 19ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது ஓட்டுகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி பஸ்சை பின்தொடர்ந்து, டூவீலரில் வந்த வாலிபர் கல்லூரிக்குள் நுழைய முயன்றார். அப்போது கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகளிடம், வாலிபர் வாக்குவாதம் செய்து அத்துமீறி வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, சீப்பாலக்கோட்டை ராஜா தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ்கண்ணன்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: