இண்டூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

தர்மபுரி, ஏப்.30: நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா, இண்டூர் பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர் வழங்கி தொடங்கி வைத்தார். மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வைகுந்தம் தலைமை வகித்தார்.

வெள்ளரிக்காய், இளநீர், மோர், நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணன், ரவி, சக்திவேல் மற்றும் சரவணன், காந்தி, மாது, சஞ்சீவ் காந்தி, மேகலா, நீதிபதி கவி, சித்தன், சின்னசாமி, கந்தசாமி, கோவிந்தராஜ், சிலம்பரசன், குமார், பெருமாள், சின்னபையன், சக்திவேல், ரவி, இளங்கோ, சிவன், ரத்தினவேல், முனிமாது, மாது, தேவராஜ், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post இண்டூரில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: