கார் கவிழ்ந்த விபத்தில் ஐடி ஊழியர் பலி

 

காரிமங்கலம், ஏப்.29:விழுப்புரம் மாவட்டம், மேல்மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மகன் ராகுல்(31). இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.ராகுல் தனது நண்பர்கள் சந்தோஷ்ராஜ்(31), ஜெய்ஆரோக்(33), ஜெயக்குமார்(32), பிரவீன் குமார்(31) ஆகியோருடன் காரில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சென்று விட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சென்றனர். காரை ஜெய் ஆரோக் ஓட்டி சென்றார். காரிமங்கலம்-போச்சம்பள்ளி சாலையில் பச்சனம்பட்டி என்ற பகுதியில் சென்றபோது கார் நிலை தடுமாறி திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராகுல் செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேருக்கும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் கவிழ்ந்த விபத்தில் ஐடி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: