ஒன்றிய அரசுடன் அமலாக்கத்துறை இணைந்து ஆம் ஆத்மிக்கு எதிராக சதித்திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசு, அமலாக்கதுறையை எந்த அளவிற்கு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக பயன்படுத்தி உள்ளது என்பதற்கு மிகச்சரியான உதாரணமாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும்போது கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் அவர் சார்ந்த ஆம் அத்மி கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசுடன் இணைந்து, அமலாக்கத்துறை சதி திட்டத்துடன் நடந்து உள்ளது ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசுடன் அமலாக்கத்துறை இணைந்து ஆம் ஆத்மிக்கு எதிராக சதித்திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு appeared first on Dinakaran.

Related Stories: