இந்த விபத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பவித்ரன் உள்பட அனைவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவ்வழியாக வந்த சிலர் ஓடிவந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியதால் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்துகிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்தில் சிக்கியவர் பெருங்குடி பகுதியை சேர்ந்த மோசஸ்(54) என்பதும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவருகின்றார் என்பதும் தெரிந்தது. அவரை உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்ஷா தொழிலாளி முதுகு உடைந்தது appeared first on Dinakaran.