ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டது. தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் 2வது முறை நேரடியாக சம்மன் வழங்கப்பட்டது. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடம் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், ஓட்டல் மேலாளர் ஆசைத்தம்பி, விடுதி மேலாளர் ஜெய்சங்கருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: