நூலகத்தில் புத்தக தின விழா

 

ராமேஸ்வரம், ஏப்.24: உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று பாம்பன் அரசு கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.  ராமேஸ்வரம் அருகே பாம்பன் அரசு கிளை நூலகத்தில் நேற்று உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக கண்காட்சியை ஆலோசகர் முத்து துவங்கி வைத்து புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த பேசினார்.

இதில் கலந்து கொண்ட வாசகர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் புத்தகங்களை பார்வையிட்டு வாசித்தனர். இதற்கு வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமு, ஒருங்கிணைப்பாளர்கள் ராமசாமி, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த பாம்பன் நூலகர்ரிஸாலத் அலி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

The post நூலகத்தில் புத்தக தின விழா appeared first on Dinakaran.

Related Stories: