பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

சாயல்குடி, ஏப்.24: சாயல்குடியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சாயல்குடியில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தெந்த பாடத் திட்டங்களை தேர்வு செய்யலாம் என விவாதங்கள் மூலம் நீட் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள்,

தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை பயிலும் வழிமுறைகள் என அனைத்து வகையான பாடத்திட்டத்திற்கான வழிமுறைகள் சிறந்த கல்வியாளர்கள் மூலம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மருத்துவத்துறையில் உள்ள பாட பிரிவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் எதிர்கால திட்டங்களுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதில் கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சிறுவர் மன்ற தலைவி சுமதி செய்தார்.

The post பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: