12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விமானங்களில் பெற்றோருடன் இருக்கை ஒதுக்க வேண்டும்: டிஜிசிஏ உத்தரவு

புதுடெல்லி: விமானங்களில் பயணிக்கும் 12 வயது வரை உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பயணிப்பதில்லை என பயணிகள் விமான போக்குவரத்து ஆணையரகத்துக்கு அதிகளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து பயணிகள் விமான போக்குவரத்து ஆணையரகம் வௌியிட்டுள்ள அறிப்பில், “12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே பிஎன்ஆரில் பயணிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவருடனாவது இருக்கைகள் ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக விமான நிறுவனங்களுக்கான போக்குவரத்து சுற்றறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விமானங்களில் பெற்றோருடன் இருக்கை ஒதுக்க வேண்டும்: டிஜிசிஏ உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: