டூவீலர்கள் மோதிய விபத்தில் விவசாயி பலி

கடத்தூர், ஏப்.24:கடத்தூர் மணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மகன் விஜய் (33), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில் கடத்தூரில் இருந்து சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் அதேபகுதியை சேர்ந்த பழனி (47) என்பவர் வந்தார். எதிர்பாராதவிதமாக டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட விஜய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழனி கை, முகம், கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த பழனியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதிய விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: