மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்

புழல்: சென்னை மாதவரம் மண்டலம் 23 மற்றும் 24 வது வார்டுகளுக்கு உட்பட்ட புழல் புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கன்னடபாளையம் உள்பட பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க தெருக்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்திவந்தனர். இந்த நிலையில், இந்த கிணறுகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாத நிலைமைக்கு சென்றுவிட்டது. இந்த விஷயத்தில், மாதவரம் மண்டலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது; புழல் புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், காவாங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது குழாய் மூலம் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே பல தெருக்களில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். அப்படிசெய்தால் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். எனவே மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரிகள், வார்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தெருக்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக சரி செய்யவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: