அத்துடன் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் ஈரான் அதிபர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரிடம் இப்ராஹிம் ரைசி விரிவாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது பாகிஸ்தான் உடனான நல் உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் வர்த்தகம், எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஈரான் அதிபர் விவாதிக்க உள்ளார்.
The post ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில், மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்..!! appeared first on Dinakaran.