இதனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் மூன்று, நான்கு மாதங்கள் சிறுநீரகம், இதயம் மற்றும் பிற உறுப்புகள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும்’’ என்றார். முன்னதாக, ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால் தினமும் மாம்பழம், இனிப்பு போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால் தரப்பு வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘‘வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட 48 உணவுகளில் 3 முறை மட்டுமே மாம்பழங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் தரப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
The post இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு கெஜ்ரிவால் மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.