இத்துடன் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இவை தவிர லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பதும் வாக்குப்பதிவு குறைந்ததற்கான மற்றொரு காரணமாக தெரிகிறது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் பிரச்சனைகளை வலியுறுத்தி மக்கள் தேர்தல் புறக்கணித்து இருந்ததும் வாக்குப்பதிவு குறைய காரணமாகும். இவற்றுடன் தமிழ்நாடு முழுவதுமாக வறுத்தெடுத்து வரும் வெப்பமும் ஒரு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு மிக மந்தமாக இருந்ததை பல்வேறு தரவுகளும் சுட்டிக் காட்டி உள்ளன.
The post வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!! appeared first on Dinakaran.