மது கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் மேத்யு பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 21ம் தேதி (நாளை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு கலால் துறை ஆணையர் உத்தரவுப்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மது கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: