என்.எஸ்.ஜி. தலைவராக நளின் பிரபாத் நியமனம்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு படை தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நளின் பிரபாத் நியமிக்கப்பட்டு உள்ளார். 1992 ஆந்திரா பிரிவை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி நளின் பிரபாத் தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு படையான தேசிய பாதுகாப்பு படையின்(என்எஸ்ஜி) தலைவராக நியமிக்கப்பட்டள்ளார்.

இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நளின் பிரபாத் 2028 ஆகஸ்ட் 31 வரை அதாவது ஓய்வு பெறும் தேதி வரை தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக பொறுப்பு வகிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post என்.எஸ்.ஜி. தலைவராக நளின் பிரபாத் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: