வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்

பாகூர்: புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், பாகூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட பூத்தில் `தாமரை பூ’ வடிவத்தில் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட பாகூர் பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், தேர்தல் விதிமுறையை மீறி, பாஜ சின்னமான தாமரை பூக்கள் வடிவத்தில் பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் பேப்பர் பூக்களால் நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் தாமரை பூ வடிவிலான பேப்பர் பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.

The post வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: