ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதியில் பா.ஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே நிறுத்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி எம்பியாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த விநாயக் ரவுத் உள்ளார். இந்த மக்களவை தேர்தலிலும் அவர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான உதய் சமந்தின் சகோதரர் கிரண் சமந்த் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால், பாஜ அந்த இடத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கி உள்ளது. இந்த தொகுதியில் பாஜ இதற்கு முன்பு போட்டியிடவில்லை. ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி பாரம்பரியமாக சிவசேனாவின் கோட்டையாக இருந்து வருகிறது.

The post ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ appeared first on Dinakaran.

Related Stories: