போலீஸ் கொடி அணிவகுப்பு

மதுரை, ஏப்.18: மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலைய பகுதியில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், மக்களிடம் பாதுகாப்புணர்வை அதிகப்படுத்தும் விதமாகவும் தேர்தல் காலத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட இந்த அணிவகுப்பு பல்வேறு காவல்நிலைய பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் நேற்று மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலைய பகுதியில் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மத்திய சேம காவல்படையினர் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post போலீஸ் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: