இறைச்சி கடைகள் செயல்பட தடை

சேலம், ஏப்.18: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது. எனவே, சேலம் மாநகர பகுதியில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் 21ம் தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவினை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசு உத்தரவினை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

The post இறைச்சி கடைகள் செயல்பட தடை appeared first on Dinakaran.

Related Stories: