தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி

தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கடப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன் மகன் சத்தியமூர்த்தி (26). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், டூவீலரில் சொந்த வேலையாக கிருஷ்ணகிரி சேலம் நெடுஞ்சாலையில், பழைய தர்மபுரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுபற்றி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: