இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும், நேற்று முன்தினம் இரண்டரை மடங்கு அளவுக்கு அதாவது ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருந்தது. ஒரு நபருக்கு 4 குவாட்டர் மட்டும் வழங்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு சிலர் கூடுதலாக மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
The post 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் ஒரேநாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.