பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்கு கேட்ட மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்கு கேட்ட மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த மாதம் திடீரென தலைமறைவான ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் சரணடைய விலக்களிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

The post பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்கு கேட்ட மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: