வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து ‘மோடி சுட்ட வடைகள்’ தபெதிக நூதன பிரசாரம்

 

திருப்பூர், ஏப்.17: திருப்பூரில், திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ‘மோடி சுட்ட வடைகள்’ என்ற தலைப்பில் பிரசார கூட்டம் புதுக்காலனி பகுதியில் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார் தலைமை வகித்தார்.

பிரச்சார குழு செயலாளர் சீனி.விடுதலையரசு, மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, மாநகர செயலாளர் கார்த்திகேயன், மாணவர் அணி பொறுப்பாளர் அறிவரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சார கூட்டம் 15.வேலம்பாளையம், அங்கேரிபாளையம், மாஸ்கோ நகர், வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அப்போது வடை போன்ற வடிவத்தில் மோடி சுட்ட வடைகள் என எழுதி நூதனமாக வாக்கு சேகரித்தனர்.

The post வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து ‘மோடி சுட்ட வடைகள்’ தபெதிக நூதன பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: