இளைஞர்களை வன்கொடுமை செய்த வழக்கில் ஒய்எஸ்ஆர் வேட்பாளருக்கு 18 மாதம் சிறை தண்டனை

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு தேர்தலில், ராமச்சந்திரபுரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக தோட்டா திரிமுர்த்திலு போட்டியிட்டார். அப்போது, ஏற்பட்ட மோதல் தொடர்பாக தலித் இளைஞர்கள் 5 பேரை கடந்த 1996ல் தோட்ட திருமூர்த்திலு ஆதரவாளர்கள் மொட்டையடித்து கொடுமைப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட திருமூர்த்திலு உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தோட்ட திருமூர்த்திலு உள்பட 9 பேருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது எம்.எல்சியாக உள்ள திருமூர்த்திலு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

The post இளைஞர்களை வன்கொடுமை செய்த வழக்கில் ஒய்எஸ்ஆர் வேட்பாளருக்கு 18 மாதம் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: