கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம்

கொடைக்கானல், ஏப். 17: கொடைக்கானலில் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் அப்துல் கனி ராஜா தலைமை வகித்தார். செயலாளர் சலாமத், பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக டிஎஸ்பி மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏப்ரல், மே கோடை சீசன் காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க ஹோட்டல் சங்கமும், காவல் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

கொடைக்கானலில் ஏற்படக்கூடிய தண்ணீர் பிரச்னையை சரிசெய்து சுற்றுலா பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டும். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நியாயமான விலையில் சுகாதாரமான, சுத்தமான தங்கும் வசதி மற்றும் உணவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் ஸ்ரீநாத் நன்றி கூறினார்.

The post கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: