இது குறித்து அசிஸ்டன்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கொண்டுவந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து குற்றவாளிகளை விரைவாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் களங்களில் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க சிரமம் உள்ளதா? என்ற கேள்விக்கு தேர்தல் பணியின் பாதுகாப்பு என்பது வேறு, குற்றவாளிகளை கண்டு பிடிப்பது வேறு என்றும் அவர் கூறினார். சென்னை ஆவடி காவல் ஆணையர்கள், தாம்பரம் ஆணையர்கள் உள்பட அனைத்து பகுதியிலும் கொள்ளையர்களின் புகை படங்களை கொடுத்து தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு..!! appeared first on Dinakaran.